சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இம்மாதம் முதல் குறித்த சாரதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற மன்றம் தெரிவித்துள்ளது.

விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

மாற்றுத்திறனாளிகளுக்காக ஜனாதிபதி அல்லது பிரதமர் தலைமையில் சுயாதீன ஆணைக்குழுவை நிறுவுமாறு மாற்றுத்திறனாளிகளுக்கான ஐக்கிய முன்னணி, மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற மன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எனினும், ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடலொன்றை நடத்த மாற்றுத்திறனாளிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமென அங்கவீனமுற்றோர்களுக்கான பாராளுமன்ற மன்றத்தின் தலைவர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: webeditor