5,000க்கும் மேற்பட்ட சிறுமிகள் சொந்த விருப்பின் பேரில் துஷ்பிரயோகம்

கடந்த நான்கு ஆண்டுகளில் 16 வயதுக்குட்பட்ட 5,000க்கும் மேற்பட்ட சிறுமிகள் சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதன்படி, 2018ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை நாடு முழுவதிலும் உள்ள 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக 6307 முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் பாலித பண்டார சுபசிங்க இதனை தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இதில் 5055 முறைப்பாடுகள் சிறுமிகளின் சம்மதத்துடன் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 17 பொலிஸ் பிரிவுகளில் 16 வயதுக்குட்பட்ட 132 சிறுமிகள் கடந்த மூன்று வருடங்களாக வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவர்களில் பெரும்பாலானோர் சொந்த விருப்பத்தின் போரில் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் பாலித பண்டார சுபசிங்க தெரிவித்தார்.

இதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் 15 சிறுமிகள் மட்டுமே பலவந்தமாக பலாத்காரம் செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin