தாயாரின் லொட்டரி எண்களை பயன்படுத்திய மகனுக்கு அடித்த அதிர்ஷ்டம்

அமெரிக்காவில் நபர் ஒருவர் லொட்டரியில் பரிசு கிடைத்ததன் மூலம் கோடீஸ்வரராகியுள்ளார்.

பல்டிபோர் நகரை சேர்ந்தவர் ஆண்ட்ரி ஜோன்ஸ்.

இவர் தாய் சில காலத்திற்கு முன்னர் உயிரிழந்துவிட்டார்.

இந்த நிலையில் லொட்டரி விளையாடும் பழக்கம் கொண்ட ஆண்ட்ரி தனது தாயார் தேர்வு செய்து விளையாடிய அதே லொட்டரி நம்பர்களை வைத்து அண்மையில் விளையாடினார்.

இதில் அவருக்கு $50,000 என்ற பெரிய பரிசு கிடைத்துள்ளது.

ஆண்ட்ரி கூறும் போது, ”பரிசு விழுந்ததை உறுதி செய்த போது அட..! எனக்கா பரிசு… நம்பவே முடியவில்லை என தோன்றியது.

பரிசு தொகையை எப்படி செலவிடுவது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.

லொட்டரியில் பங்கேற்பர்வர்களுக்கு ஒன்றை சொல்லி கொள்கிறேன். தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருங்கள், ஒரு கட்டத்தில் பரிசு கிடைக்கும்” என கூறினார்.

Recommended For You

About the Author: admin