இலங்கை சிறையில் இருந்த மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் எட்டு பேரை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்வதாக மன்னார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த மாதம் 6 ஆம் திகதியன்று இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ராமேஸ்வர மீனவர்கள் எட்டு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கைதான எட்டு மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், குறித்த மீனவர்கள் இன்று மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்புடுத்தப்பட்டனர்.

‘எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும்’ என்ற நிபந்தனையின் கீழ் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதனை தொடர்ந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இந்திய துணை உயர்ஸ்தானிகரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin