சீரற்ற காலநிலை: பாலாலியில் தரையிறங்காது திரும்பிய விமானம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் விமானம் தரையிறங்காமல் மீண்டும் சென்னைக்கு திரும்பியது.

யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாகவே மோசமான காலநிலை நிலவி வருகின்றது. தொடர் மழை காரணமாக வடக்கின் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கின.

இந்நிலையில், இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டடுவந்த பயணிகள் விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத நிலையில் மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு திரும்பியது.

Recommended For You

About the Author: admin