ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வடக்கிற்கான விஜமொன்றிளை மேற்கொள்ளவுள்ளார் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஜனவரி 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் வடக்கிற்கான விஜயத்தினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது வடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டம் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

வடக்கு மக்களின் நீண்டகால குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொருட்டு பாலியாற்று நீர் வழங்கல் திட்டத்தை முன்னெடுக்கும் முக்கிய கலந்துரையாடல் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம்,யாழ். மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன், நீர்ப்பாசன நீர்வழங்கல் முகாமையாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இத்திட்டம் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் அது கைகூடாத நிலையில் கடந்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டடிருந்த நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியின் பலனாக அமைச்சரவை இத்திட்டத்திற்கு 250 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin