கெஹலியவை கைது செய்யுமாறு முறைப்பாடு

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கைதுசெய்யுமாறு இலஞ்சம், ஊழல் மற்றும் வீண் விரயத்துக்கு எதிரான புரவெசி பலய அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூகளை இறக்குமதி செய்ததாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக புரவெசி பலய அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

தற்போது சுற்று சூழல் அமைச்சராக பதவி வகிக்கும் கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சராக இருந்த காலப்பகுதியிலேயே இவ்வாறு தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளதாகவும் புரவெசி பலய அமைப்பு குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin