தமிழ் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி இடையே சந்திப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையில் நாளை மறுதினம் (21) கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அத்துடன், இமயமலை பிரகடனம் தொடர்பிலும் இதன்போது கருத்துக்கள் பகிரப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, எதிர்வரும் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி புதிய தலைவரை தெரிவு செய்வதற்கு இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியகுழு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

கட்சியின் செயற்குழு நேற்றைய தினம் கூடிய நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin