பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம்

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளவர்களை உடனடியாக ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அகில இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று (18) இந்த போராட்டம் இடம்பெற்றது.

“பட்டதாரி பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் பணிக்கு உள்வாங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ள போதிலும், இது தொடர்பில் உறுதியான தீர்மானத்தை எடுப்பதை அதிகாரிகள் ஒத்திவைக்கின்றனர்.

எனவே இந்த விடயத்தில் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்” என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

Recommended For You

About the Author: admin