தொடர் மழை முதலை கடிக்கு இலக்காகும் பிரமந்னாறு கிராம மக்கள்

கிளிநொச்சியில் முதலை கடிக்கு இலக்கான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

இதன்காரணமாக இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், பெரியகுளம், கண்டாவளை, நாகேந்திரபுரம், முரசுமோட்டை, ஜயங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி -அக்கரையான் பிரதான வீதியை வெள்ள நீர் ஊடறுத்து செல்வதால் அப்பகுதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலர் தற்காலிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் பிரமந்னாறு பகுதியில் முதலை கடிக்கு இலக்கான ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

குறித்த பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக முதலைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin