தென்மராட்சி இந்து மயானத்தை புனரமைக்க கோரிக்கை

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேச சபைக்கு உட்பட்ட பிண முருங்கை இந்து மயானத்தை சீரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்மராட்சி தெற்கு பிரதேசத்தின் நாவற்குழி கிழக்கு , கோவிலாக்கண்டி மற்றும் தச்சன்தோப்பு ஆகிய மூன்று பிரதேசங்களையும் சேர்ந்த மக்கள் குறித்த மயானத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த மயானம் நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் காணப்படுகின்றது.

“மயானத்திற்கு செல்லும் வீதி மற்றும் ஏரி கொட்டகைகள் என்பன சேதமடைந்து காணப்படுவதால் பெரும் சிரமங்களுக்கு எதிர்நோக்கின்றோம்.

சுமார் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த மயானத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே குறித்த மயானத்தை விரைவில் புனரமைத்து தரவேண்டும்” என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin