யாழில் ஹெரோயினுடன் மூன்று போர் கைது

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது மூன்று பேர் போதைப்பொருளுடன் கைது இன்று செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை முழுவதும் நேற்று (17) காலை முதல் பொலிஸார் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் போதைப் பொருட்களை கண்டுபிடிக்கும் விசேட தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்திய பிரிவுக்கு உட்பட திருநெல்வேலி பால்பண்ணை பிரதேசத்தில் 20, 21 மற்றும் 23 வயதான இளைஞர்களை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து ஹெரோயின் மற்றும் புகையிலை கலந்த மாவா என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin