மில்கோ நிறுவன தலைவர் இராஜினாமா

மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுக பெரேரா தமது பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளார்.

நிதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுக பெரேராவின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு மேலும் ஒருமாத காலம் அவகாசம் காணப்படுகின்றது.

இருப்பினும், உள்நாட்டு மற்றும் இந்திய நிறுவனத்துடன் இணைந்து மில்கோ நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருவதன் காரணமாக தாம் பதவி விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக ரேணுக பெரேரா தெரிவித்துள்ளார்.

ரேணுக பெரேரா பதவி விலக வேண்டுமெனக்கோரி மில்கோ நிறுவன ஊழியர்களினால் கடந்த சில வாரங்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இலாபத்தில் இயங்கும் மில்கோ நிறுவனம் ரேணுக பெரேராவின் பதவிக்கு காலத்தில் நட்டத்தில் இயங்குவதாக ஊழியர்களை குற்றம் சாட்டுகின்றனர்.

Recommended For You

About the Author: admin