முரண்பாடு முடிவுக்கு வந்தது: அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்துவதா அல்லது பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதா என்பது சம்பந்தமான அரசாங்கத்திற்குள் இருந்து வந்த கருத்து முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டு வந்து முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

கடந்த காலம் முழுவதும் அரசாங்கத்திற்குள் ஒரு அணி முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என கூறி வந்ததுடன் மேலும் ஒரு அணியினர் முதலில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்து வந்தனர்.

இதனடிப்படையில் அடிக்கடி ஜனாதிபதியை சந்தித்து இரண்டு அணியினரும் ஜனாதிபதியிடம் இருந்த தேர்தல்கள் தொடர்பில் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், தனது இறுதி முடிவை அறிவித்துள்ள ஜனாதிபதி அடுத்த ஆண்டில் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்த போவதாகவும் அதன் பின்னர் பொதுத் தேர்தல் மற்றும் ஏனைய தேர்தல்கள் நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin