பெண்ணுக்கு நிகழந்த கொடூரம்!

தனது வீட்டுக்கு அருகில் பெண் ஒருவர் சிறுநீர் கழித்தாகக் கூறி அயலவர்கள் அவர் மீது கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒன்று இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் பதிவாகியுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான 35 வயதுடைய பெண் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அயலவர்கள், பெண்ணின் அந்தரங்கப் பகுதியை இரும்பு கம்பியால் தாக்கியதாகவும், இதனால் அவர் மயக்கமடைந்ததாகவும் இந்திய ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

குறித்த பெண் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: webeditor