இலங்கை பெற்றோலிய கூட்டுஸ்தாபனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டில் டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு போதுமான அளவு இருப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் வதந்திகளை நம்ப வேண்டாம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மேலும், சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் அனைத்து வகையான எரிபொருள்களும் உற்பத்தி செய்யப்படுவதாகவும், கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல முனையங்களில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் போதுமான அளவு இருப்புக்கள் இருப்பதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor