திருட்டு பணத்திலேயே “மொட்டு“ மாநாட்டை நடத்தியது: ஜே.வி.பி

நாட்டை வங்குரோத்து செய்தவர்கள் கொள்ளையடித்து பதுக்கிவைத்துள்ள பணம் எவ்வாறு வெளிவந்துள்ளது என்பதை பொதுஜன பெரமுன மாநாட்டில் காணக்கூடியதாக இருந்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

”பொதுஜன பெரமுனவின் மாநாட்டுக்கு மக்கள் எப்படி வந்தார்கள் என்று பார்த்தோம். வந்தவர்கள் நாட்டின் நலனுக்காகவும் ஊழல்வாதிகளுக்கு எதிராகவும் தமது மனசாட்சியை தட்டிப்பார்க்க வேண்டும்.

நிச்சயமாக மக்கள் பொதுஜன பெரமனவின் வலையில் சிக்க தயாராக இல்லை. அவர்கள் தெளிவாக உள்ளனர். நாட்டின் நலன் குறித்தே மக்கள் சிந்திக்கின்றனர். அதனால் பெரும்பான்மையான மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்துள்ளனர்.

மோசடியாளர்கள் கொள்ளையடித்த பணத்தில் மீண்டும் மக்களை ஏமாற்ற பார்க்கின்றனர். அது ஒருபோதும் நடைபெறாது.” என்றும் வசந்த சமரசிங்க கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin