கனடாவில் இருந்து தப்பிய போதைப் பொருள் கடத்தல்காரன் ராஜ்குமார் மெஹ்மி

அமெரிக்காவில் இருந்து கனடாவிற்கு 80 கிலோ கொக்கைன் போதை பொருட்களை கடத்திய 60 வயதான சீக்கிய டிரக் ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ராஜ்குமார் மெஹ்மி என்ற நபர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாவும் அவரை தொடர்ந்து தேடி வருவதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மெஹ்மி 2017 ஆம் ஆண்டு கோகோயின் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.

பின்னர் நவம்பரில் பிரிட்டிஷ் கொலம்பியா நீதிமன்றத்தால் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பே அக்டோபர் 11 ஆம் திகதி மெஹ்மி இந்தியாவிற்கு தப்பிச் சென்றார்.

அவருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று RCMP ஃபெடரல் குற்றப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும், மெஹ்மியை கைது செய்ய இன்டர்போலையும் பொலிஸார் அணுகியுள்ளனர்.

Recommended For You

About the Author: admin