மட்டு வாவியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்

மட்டக்களப்பு வாவியில் இருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சடலம் நேற்றிரவு 7 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

வாவியில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் இந்த சடலம் சிக்கியுள்ளதுடன் மீனவர் வழங்கிய தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் 60 வயதுக்கும் மேலான வயதுடையவராக இருக்கலாம் எனவும் சடலமாக மீட்கப்பட்ட நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலத்தை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருவதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் கூறியுள்ளனர்.

Recommended For You

About the Author: admin