துப்பாக்கி சூடு : 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் வைத்தியசாலையில்

றாகமை – வல்பொல பிரதேசத்தில் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 வயதுடைய சிறுவன் மற்றும் பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூவரும் றாகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin