வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கும் கண் வைத்தியர்கள்

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் இன்று (14) அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கண் வைத்தியசாலையின் பிரதம நிருவாகியின் முறைகேடுகள் தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே கண் வைத்தியசாலையில் இன்று காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் வைத்தியர் சமில் விஜேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor