தப்பிச் செல்ல முயற்சித்த சிறுமிகள்: பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைப்பு

பொலன்நறுவை மாவட்டம் ஹிங்குரக்கொட ஹத்தமுன பெண்கள் காப்பகத்தில் இருந்த மூன்று சிறுமிகள் அங்கிருந்து நேற்று மாலை தப்பிச் செல்லும் போது அவர்களை பொறுப்பில் எடுத்துக்கொண்ட பொலிஸார், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

காப்பங்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமிகளே இவ்வாறு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.

இது தொடர்பான பொலன்நறுவை வைத்தியசாலை சந்தியில் வசித்து வரும் காப்பகத்தின் நிர்வாகிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஹிங்குரக்கொட பொலிஸார் கூறியுள்ளனர்.

காப்பகத்தில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த இந்த சிறுமிகள் ஹிங்குரக்கொட நகரில் இருந்த போது பொலிஸார் சிலர் அவர்களை தமது பொறுப்பில் எடுத்து,ஹிங்குரக்கொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொலன்நறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வாவின் ஆலோசனைக்கு அமைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin