தந்தையால் சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம்!

பொலன்னறுவை – தியபெதும பிரதேசத்தில் வசிக்கும் 3 வயது சிறுமியின் இடது முழங்கையின் மேல் பகுதியை எரித்த சம்பவம் தொடர்பில் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாயாரின் முறைப்பாடு
24 வயதுடைய தந்தையே கைது செய்யப்பட்டுள்ளதாக தியபெதும பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த சிறுமி தியபெதும வைத்தியசாலையில் இருந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் சிறுமியின் தாயார் தியபெதும பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor