அதிக விலைக்கு விற்கப்படும் முட்டைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை!

இறக்குமதி செய்யப்பட்ட 6 மில்லியன் முட்டைகள் மக்கள் பாவனைக்கு இன்றும் (13) நாளையும் (14) சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது.

முட்டை விலை உயர்வு
சந்தையில் முட்டை விலையின் 60 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக நுகர்வோர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், சதொச ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை கொள்வனவு செய்ய வாய்ப்பு உள்ளதாக அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

சந்தையில் முட்டையின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு பொறுப்பான அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவன தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor