இன்று நிச்சயம் இரண்டாம் தவணைக் கடன் கிடைக்கும்: ஜனாதிபதி உறுதி

சர்வதேச நாணய நிதியத்தினால் இந்த நாட்டில் வழங்கப்படும் விரிவான கடன் வசதி தொடர்பான இரண்டாம் தவணைகள் இன்று நிச்சயமாக வழங்கப்படும் என பந்துல குணவர்தன கூறுகிறார்.

அமைச்சரவை அறிவிப்புகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி இது தொடர்பில் கருத்து வெளியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு 48 மாதங்களுக்கு நீடிக்கப்பட்ட கடன் வசதியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் முதலாவது மீளாய்வு நடவடிக்கைகளுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இன்று இடம்பெற்றது.

எதிர்பார்த்த அரச வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால் இந்தகடன் வழங்கப்பட்டுள்ளதாக பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் படி சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொண்டிருந்தது.

இதற்கமைய, முதல் தவணையாக 330 மில்லியன் அமெரிக்க கடனுதவி முன்னதாக இலங்கைக்கு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin