ஊடகவியலாளர்களின் சம்பளம் அதிகரிக்குமா?

ஊடகவியலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றில்  (08) வரவு – செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

நாட்டில் தற்போது ஊடகவியலாளர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், பத்திரிக்கை நிறுவனங்களால் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்ல எனவும் அவர் கூறினார்.

எனவே, ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் எடுத்துரைத்தார்.

இதேவேளை, பொதுமக்களுக்கு செய்திகளை எடுத்துச்செல்லும் ஊடக நிறுவனங்கள் மூடப்பட்டால், தகவல்கள் சென்றடைவது தடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

Recommended For You

About the Author: admin