இலங்கை கடற்ப்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் கைது!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 படகுகளுடன், 22 தமிழக கடற்றொழிலாளர்கள் நேற்றிரிவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு கடற்பரப்பில், கடற்படையினர் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில், அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 3 படகுகளுடன், 14 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்றிரவு, காங்கேசன்துறை கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தலைமன்னார் கடற்பரப்பில், அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 8 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், கைதான அனைத்து கடற்றொழிலாளர்களும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor