சிறுப்பிட்டியில் ஆறுமுக நாவலர் குருபூஜை விழா

சிறுப்பிட்டியில் ஆறுமுக நாவலர் குருபூஜை விழா இடம்பெற்றது.

சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால. குணானந்தக்குருக்கள்  நடாத்தும் வாராந்தப் பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவும் மாதத்தோறும் நாயன்மார் குருபூஜையும் ஓர் அங்கமாக ஸ்ரீல ஸ்ரீ ஆறுமிகநாவலர் 144 வது குருபூஜை விழா சிறுப்பிட்டி மேற்கு அருள்மிகு நாகதம்பிரான் ஆலயத்தில் நேற்று 04.12.2023 திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்குச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் நாவலர் குருபூசையும், சொற்பொழிவும் இடம்பெற்றது.

அந்தவகையில் நாவலர் குருபூசையை அடுந்து , மாணவர்களின் கலை நிகழ்வும் , சைவப்புலவர் செ. த. குமரன் அவர்கள் ” நால்வர் நெறியில் நாவலர் ” என்னும் விடயப்பொருளில் சொற்பொழிவும், சொற்பொழிவில் இருந்து மாணவர்களிடம் விளாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்பட்டன.

 

Recommended For You

About the Author: S.R.KARAN