கனமழையால் நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு.

மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று சென்னையில் கனமழை பெய்தது. இந்நிலையில் கனமழை மற்றும் புயல் அபாயத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நேற்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்ததால், சென்னையில் பல இடங்கள் தண்ணீரில் மீழ்கியது.

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் , பள்ளிகள், தனியார், அரசு நிறுவனங்கள், வங்கிகள் என்று எல்லாவற்றுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. நேற்றும் இன்றும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நாளை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. சில இடங்களில் மழைநீர் வடியாததால், மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Recommended For You

About the Author: webeditor