O/L பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை கோரும் பணிகள் இன்றையதினம் (04-12-2023) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அனைத்து மாணவர்களும் இணையத்தளம் மூலம் மீளாய்வு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், சமீபத்தில் வெளியான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான சான்றிதழ்களை இணையவழியில் பெற்றுக்கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor