சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பாதுகாப்பாக மீட்பு

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பாதுகாப்பாக வெளியே அழைத்து வரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் இருக்கும் சில்க்யாரா சுரங்கப்பாதை கட்டுமானத்தின் போது கடந்த நவம்பர் 12ஆம் திகதி சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தபோது சுரங்கப்பாதைக்குள் பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சிக்கினர். தொழிலாளர்களை மீட்கும் பணி 17வது நாளாக இன்றும் நடைபெற்றது.

உயிர் வாழத் தேவையான ஆக்சிஜன், உணவு, தண்ணீர் போன்றவை வழங்கப்பட்டன.41 தொழிலாளர்களையும் பத்திரமாக வெளியே கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

Recommended For You

About the Author: admin