மாமனிதர் நடராஜா ரவிராஜின் 17ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 17ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று 10/11/2023 வெள்ளிக்கிழமை காலை தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாகவுள்ள ரவிராஜின் திருவுருவச் சிலையடியில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

 

இதன்போது மாமனிதர் ரவிராஜின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில்
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், ஒய்வுநிலை அதிபர் க.அருந்தவபாலன், சாவகச்சேரிப் பிரதேசசபையின் முன்னாள் உப தவிசாளர் செ.மயூரன், மற்றும் ரவிராஜின் உறவினர்கள், மக்கள் பிரதிநிதிகள்,பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN