” ஊர் ஊராகச் சென்று இறைவனை வெண்பாவால் புகழ்ந்து பாடிய நாயனார் ” குருபூசையும் சொற்பொழிவும்

தெல்லிப்பளையில் குருபூசையும் சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது.

சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடத்தப்படும் வாராந்த பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் – 31 ( ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ) தெல்லிப்பளை அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயப் பிரதான மண்டபத்தில் நாளை 10.11.2023 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

சேக்கிழார் பெருமானின் குருபூஜையைத் தொடர்ந்து சொற்பொழிவினை இளஞ்சைவப்புலவர் க. கைலநாதன் அவர்கள் ” ஊர் ஊராகச் சென்று இறைவனை வெண்பாவால் புகழ்ந்து பாடிய நாயனார் ” என்னும் விடயப்பொருளில் சொற்பொழிவும், சொற்பொழிவில் இருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

Recommended For You

About the Author: S.R.KARAN