விவசாயிகளுக்கான மகிழ்ச்சியான செய்தி!

கடந்த ஒரு ஆண்டில் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு பெரும்போகத்தில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக 17,000 ரூபா பெறுமதியான டீசலை வழங்க விவசாய அமைச்சு முடிவுசெய்துள்ளது.

உரம் கொள்வனவு செய்வதற்காக அரசினால் வழங்கப்படும் 15,000 ரூபா நிவாரணத் தொகை மற்றும் ஹெக்டேர் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகைக்கு மேலதிகமாக உரிய நிவாரணம் வழங்கப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

பயிர் சேதங்களுக்கு உள்ளான விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணம் தொடர்பில் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்று அங்கு இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

அஇன்படி, அடுத்த இரு நாட்களில் ஒவ்வொரு விவசாயிக்கும் தலா 40 லீற்றர் டீசல் வழங்கப்படவுள்ளது.

Recommended For You

About the Author: webeditor