இன்று நள்ளிரவு முதல் தபால் தொழிற்சங்க வேலை நிறுத்தம்!

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலையம் அமைந்துள்ள கட்டிடத்தை விற்பனை செய்யும் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பிரச்சினைக்கு தீர்வுக் காணத் தவறினால் தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்க தயாராகவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor