முல்லைத்தீவில் துணிகர கொள்ளை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட தேராவில் ஏரிக்கரை பகுதியில் வீட்டில் இருந்த பெண்களை அச்சுறுத்தி பணம் நகை உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு (04-11-2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசாரணை
வீட்டில் வயோதிபத்தாய் மற்றும் பெண் அவரது மகள் ஆகியோர் இருந்த வேளை முகமூடி அணிந்த இருவர் கத்தியுடன் வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை கத்தி முனையில் அச்சுறுத்தி கொள்ளை அடித்துச் சென்றுள்ளார்கள்.

வீட்டிலிருந்த பணம் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை இதன் போது கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுமார் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களை இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

முகமூடி அணிந்த இருவரே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor