யாழ் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல்

யாழ்ப்பாணம் – சுதுமலையில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார்சைக்கிள் என்பவற்றின் மீது பெற்றோல் ஊற்றி தீயிட்டு எரித்துள்ளது.

வீடொன்றுக்குள் நேற்றைய தினம் அத்துமீறி நுழைந்த கும்பல் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளது.

தீவிர விசாரணைகளில் ஈடுபடும் பொலிஸார்
இதேவேளை தாக்குதலுக்குள்ளான வீட்டில் வசிக்கும் இளைஞரை, மானிப்பாயில் அண்மையில் இடம்பெற்ற கடை ஒன்றின் மீதான வாள்வெட்டு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் பெற மானிப்பாய் பொலிஸார் அழைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor