வரவு செலவு திட்டம் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு!

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம், ஆகஸ்ட் 30 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அன்றைய தினம் பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் எனவும், வரவு செலவுத் திட்ட உரை பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் எனவும் நாடாளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு அறிவித்துள்ளது.

வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம்

செப்டெம்பர் 1ஆம் மற்றும் 2 ஆம் திகதிகளில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.

இதேவேளை, எதிர்வரும் 29 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், அங்கு மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெறவுள்ளது.

Recommended For You

About the Author: webeditor