ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி யாழ். நகரில் துண்டுப் பிரசுரம் விநியோகம்

நாளைய தினம் தமிழ்த் தேசிய கட்சிகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தழுவிய முழுஅடைப்பு ஹர்த்தாலுக்கு பொதுமக்களின் ஆதரவு கோரி இன்று யாழ். நகர் சந்தை மற்றும் கடைகளில் விளக்க துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

இதில் புளொட் அமைப்பின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், ஈ. பி. ஆர். எல். எப். தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், யாழ். மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் து. ஈசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.

 

Recommended For You

About the Author: S.R.KARAN