ஹர்த்தாலுக்கு மக்களின் ஆதரவு கோரி மானிப்பாய், சங்கானை பிரதேச சந்தைகள், கடைகளில் துண்டுபிரசுர விநியோகம்

நாளைய தினம் தமிழ்த் தேசிய கட்சிகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தழுவிய முழுஅடைப்பு ஹர்த்தாலுக்கு பொதுமக்களின் ஆதரவு கோரி இன்று மானிப்பாய், சங்கானை பிரதேசங்களின் சந்தைகள், கடைகளில் விளக்க துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

இதில் புளொட் அமைப்பின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், முன்னாள் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்களான அ.ஜோன் ஜிப்பிரிக்கோ, லோ .ரமணன் முன்னாள் யாழ். மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந்த், முன்னாள் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் மா.கலையமுதன், முன்னாள் வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் கு.குணசிறீ மற்றும் புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் ந.கணேந்திரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN