பாடசாலை மாணவர்களிடம் மோசமாக நடந்து கொண்ட நபருக்கு நேர்ந்த கதி!

பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரபல கபுவா 20க்கும் மேற்பட்ட சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக காலி நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் (23-08-2022) தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சந்தேக நபரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 10ஆம் திகதி, பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில், மாதரம்ப, உனவட்டுனவில் உள்ள ஆலயம் ஒன்றின் பிரபல கபு ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர், சந்தேக நபர் காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இன்று வழக்கு விசாரணை நடைபெற்ற போது சந்தேகநபர் மற்றும் அவருக்கு உதவியதாக கூறப்படும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி காலி நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் கபுவாவிற்கு எதிராக மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்.

இந்த கபுவா 09 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட 20க்கும் மேற்பட்ட சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor