யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி மாயம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீட இறுதி ஆண்டு மாணவியை காணவில்லை என பெற்றோரினால் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் அநுராதபுரம் பகுதியை சேர்ந்த மாணவியே காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காணாமல் போன மாணவி யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியில் தங்கியிருந்து தனது கற்றல் நடவடிக்கையை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (03-10-2023) முதல் அவரது தொலைபேசி இயங்காத நிலையில், அவரை தேடி அநுராதபுரத்தில் இருந்து, யாழ்ப்பாணத்திற்கு பெற்றோர் வந்துள்ளனர்.

இதனைடுத்து விடுதியில் பெற்றோர் விசாரித்த போது, மாணவி செவ்வாய்க்கிழமை விடுதியிலிருந்து வெளியேறி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து பெற்றோரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor