முதலாவது மகப்பேற்று வைத்தியநிபுணர் காலமானார்!

கிழக்கின் முதலாவது மகப்பேற்று வைத்தியநிபுணர் என்ற பெருமையினைக்கொண்ட வைத்தியர் சீ.தங்கவடிவேல் தனது 84 ஆவது வயதில் காலமானார். நேற்று முன்தினம்(28) அவர் காலமாந்தான தெரிவிக்கபப்ட்டுள்ளது.

மக்கள் சேவையே மகேசன் சேவை என்றபதை தாரகமந்திரமாகக் கொண்டு தனது வாழ்நாளை வைத்தியசேவைக்காக அர்ப்பணித்த அவர், நீண்டகாலமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்திய நிபுணராக கடமை புரிந்து வந்துள்ளார்.

அத்துடன் இவர் யுத்த காலத்திலும் மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிவந்தவராவார். இந்நிலையில் அவரது மறைவுக்கு பலரும் இரங்கல்களை கூறிவருகின்றனர்.

மேலும் அவரது இறுதிச் சடங்கில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட பலரும் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor