இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

இன்று(22) மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை மின்சார சபையால் எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்திற்கமைய, கடந்த சில நாட்களாக நாட்டில் மின்வெட்டு நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தற்போது 3 மணித்தியாலங்கள் மின் விநியோகத் தடை மேற்கொள்ளப்படுகின்றது.

மின்வெட்டு தொடர்பில் எச்சரிக்கை

இதேவேளை, நாட்டின் மின்சார விநியோகத்திற்காக உரிய வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படாவிட்டால் 2027 ஆம் ஆண்டு வரை பல்வேறுப்பட்ட சந்தர்ப்பங்களில் மின் துண்டிப்பை மேற்கொள்ள நேரிடும் என இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor