யாழில் சட்டவிரோத மின் இணைப்பால் நிகழ்ந்த சம்பவம்

யாழ்.வசாவிளான் – சுதந்திரபுரம் பகுதியிலுள்ள வீடொன்று மின் கசிவினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அயல் வீட்டில் இருந்து மின் இணைப்பு
குறித்த வீட்டில் இருந்த இளம் குடும்பப் பெண்ணுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று கிடைத்துள்ளது.

வீட்டில் மின் இணைப்பு இல்லாத காரணத்தால் அயல் வீட்டில் இருந்து வயர் ஊடாக மின்சார இணைப்பினை பெற்றுள்ளனர்.

வீட்டில் யாரும் இல்லாத நேரம் நேற்று திடீர் மின்கசிவு ஏற்பட்டதை அடுத்து அயலவர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்த பொழுதும் வீடு முற்றாக எரிந்து நாசமாகி உள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor