சிலிண்டர்களை திருடிய நபர்கள் கைது!

மட்டக்களப்பு மாவட்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விற்பனை முகவர் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்களை சூட்சுமமான முறையில் திருடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (04) மாலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

12 எரிவாயு சிலிண்டர்கள் களவு
எரிவாயு முகவர் நிலையத்தின் பின்புற மதிலின் மேல் ஏறி, கைகளால் குறித்த சந்தேக நபர் 12 எரிவாயு சிலிண்டர்களை திருடியுள்ளார்.

திருடிய கொள்கலன்களை தனது வீட்டில் மறைத்து வைத்திருந்தபோதே சந்தேகநபர் பொலிஸாரினால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். அத்துடன் சந்தேக நபரிடமிருந்து 9 சிலிண்டர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய 3 சிலிண்டர்களை அவர் விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதான நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor