தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்

மாத்தறையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்ட நீதிமன்றில் கடமையாற்றிவந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இன்று காலை தமது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்த நபர்
உயிரிழந்தவர் மாத்தறை, கெகுணுதுர பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரென தெரியவந்துள்ளது.

அவர் உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor