தாயை கொடூரமாக கொலை செய்த மகன்

கம்பஹா – திவுலப்பிட்டிய பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக 3 பிள்ளைகளின் தாய் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூர சம்பவம் நேற்றைய தினம் (21-08-2023) மாலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த குடும்பப் பெண்ணை அவரின் மூத்த மகனே கத்தியால் கழுத்தறுத்துப் படுகொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் 52 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபரான 27 வயதுடைய மகனைக் கைது செய்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor