பாம்புக் கடிக்கு இலக்கான பெண் உயிரிழப்பு!

பசறையில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் ஒருவருக்கு பாம்பு தீண்டியமையால் அவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போதே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசறை, கோணக்கலை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் தொழிலாளி கடந்த 16ம் திகதி கோணக்கலை கீழ் பிரிவில் உள்ள தோட்டப்பகுதியில் பாம்பு தீண்டலுக்கு உள்ளாகியிருந்தமை தெரிய வந்துள்ளது.

சிகிச்சையளிக்கப்பட்டு வந்த பெண்
இதன்பின்னர் அவருக்கு பசறை மாவட்ட வைத்தியசாலையில் முதலுதவிகள் அளிக்கப்பட்டு பின்னர் சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்தநிலையில் அவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர் அப் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor