யாழ். பல்கலை. துணைவேந்தராக பேராசிரியர் ரகுராம் வர வேண்டும்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதியாக பேராசிரியர் சி. ரகுராம் பணியாற்றி வருகிறார். ஒரு சாதாரண செய்தியாளனாக ஊடகப் பயணத்தை ஆரம்பித்த ரகுராம், யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் தலைவராக பதவி உயர்வு பெற்று இன்று கலைப்பீடாதிபதியாகி பத்திரிகைத்துறைக்கு – ஊடகத் துறைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்நிலையில், எதிர்காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகி ஊடகத்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என யாழில் இன்று நடைபெற்ற மதிப்பளித்தல் நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி, பேராசிரியர் ரகுராம் அவர்களுக்கு மதிப்பளிக்கும்  நிகழ்வு யாழ் ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி தலைமையில் நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: S.R.KARAN